தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: சமூக நீதிக்கும், அனைத்து மத நல்லிணக்கத்துக்கும், தாய் மொழிக்கும் அரணாக, பாதுகாவலராக உறுதியாக பணியாற்றி கொண்டிருக்கும் முதல்வர், இந்தியாவின் முதன்மை முதல்வராக திகழ்ந்து வருகிறார். செயல் வேகத்தில் அவருக்கு நிகரான தலைவர்கள் இல்லை என்று 24 மணி நேரமும் மக்கள் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். பழிவாங்கும் அரசியல் போக்கை என்றும் நாம் அவரிடம் கண்டதில்லை. தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் அளவில்லா பற்றுக்கொண்டவர். அண்ணாவின் கனவு, கலைஞரின் துணிவு என எல்லாம் ஒன்று சேர்ந்த தலைவராக பரிணாமம் பெற்றிருக்கிறீர்கள்.
எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் தமிழக மக்களின் பாதுகாவலராக முதல்வர் இருப்பார். அது தான் அவரது 75 ஆண்டு கால வரலாறு. ஆலமரமாக நிமிர்ந்து நிற்கிறார். ஆளுமைகள் நிறைந்த தமிழ்நாட்டில் பாஜவினர் வாலாட்ட நினைத்தால் தமிழகத்தின் நம்பிக்கை பெற்ற முதல்வர், உங்கள் வாலை ஒட்ட நறுக்குவார் என எச்சரிக்கிறேன். அவ்வளவு சுலபமாக தமிழ்நாட்டு மக்கள் அவரை விட்டு கொடுக்க மாட்டார்கள். கால் நூற்றாண்டுக்கு அவர் தான் முதல்வர் என்பதை மக்கள் தீர்மானித்துள்ளனர்.
The post பாஜவினர் வாலை நறுக்குவார் முதல்வர்:செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.