பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் குற்றச்சாட்டு மீது மோடி அரசு பாரபட்சம்: நாராயணசாமி

2 days ago 3

புதுச்சேரி: பாஜக ஆளும் மாநிலங்களில் எந்த ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் மோடி அரசு கண்ணை மூடிக்கொள்கிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கும் நிலையில் மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறைக்கு எதிராகவும், கடும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற மக்களின் அன்றாட வாழக்கையின் அல்லல்களை தீர்க்கத் தவறிய மோடி அரசு மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகே புதன்கிழமை நடைபெற்றது.

Read Entire Article