“பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” - இஃப்தார் நிகழ்வில் ஸ்டாலின் உறுதி

1 day ago 3

சென்னை: “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இந்திய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. சிறுபான்மையின மக்களின் உரிமையை பறிக்கும் நோக்கத்தோடு பாஜக இதை கொண்டு வரப் பார்க்கிறார்கள். அதையும் நாடாளுமன்றத்தில் மிக கடுமையாக எதிர்த்து குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறது திமுக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்தான். பாஜக அரசின் சதித் திட்டங்கள் நிறைவேற திமுக ஒருபோதும் அனுமதிக்காது” என்று சென்னையில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி இன்று (மார்ச் 24) நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் பேசியது: “மறைந்த முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தவரைக்கும் , ‘இஸ்லாமியர்கள் வேறு; தான் வேறு’ என்று எப்போதும் நினைத்ததில்லை. ‘எனக்கு நன்றி சொல்லி உங்களிடமிருந்து என்னைப் பிரித்துவிடாதீர்கள்’ என்றுதான் அவர் அடிக்கடி சொல்லியிருக்கிறார். அவரின் வழித்தடத்தில்தான், நம்முடைய இன்றைய திராவிட மாடல் ஆட்சியும் செயல்பட்டு வருகிறது.

Read Entire Article