
இஸ்லமாபாத்,
பாகிஸ்தானில் 400 பயணிகளுடன் சென்ற பயணிகள் ரெயில் கடத்தப்பட்டுள்ளது. குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த ரெயில் கடத்தப்பட்டுள்ளது. ரெயிலில் இருந்த பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்தவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக பலோச் விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது. ரெயிலில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேரை விடுவித்துவிட்டதாகவும் கிளர்ச்சிக்குழு அறிவித்துள்ளது.