''8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால்...''- ஜெனிலியா

6 hours ago 4

சென்னை,

''சீதாரே ஜமீன் பர்'' பட ரிலீஸுக்கு தயாராகி வரும் ஜெனிலியா, 8 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அது முடியாத காரியமில்லை என்று ஜெனிலியா கூறினார்.

8 மணி நேர வேலை கோரிக்கைக்காக சந்தீப் ரெட்டி வாங்காவின் ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோனே வெளியேறியநிலையில், ஜெனிலியா சமீபத்தில் இது குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறுகையில், "இது கடினமானதுதான், ஆனால் அது முடியாதது இல்லை. தாய்மார்களுக்கு இது கடினமானதுதான், ஆனால் அது சமாளிக்க முடியாதது இல்லை. நான் ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வேலை செய்கிறேன். சில சமயங்களில் இயக்குனர் அதை 11 அல்லது 12 மணிநேரமாக நீட்டிக்கச் சொல்லும் நாட்கள் உள்ளன. இது நியாயமானது என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.

Read Entire Article