திருவள்ளூர்: தமிழ்நாடு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பா.ஜ.க.வினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை அருகே காரை தடுத்து நிறுத்தி 5 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரையும் ஏப்.2 வரை காவலில் வைக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர். அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட புகாரில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி சோமசுந்தரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
The post பா.ஜ.க.வினர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.