பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது: என்ஐஏ அதிரடி

5 hours ago 3

ஸ்ரீநகர்: காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்ததாக பர்வைஸ் அகமது ஜோதர், பஷீர் அகமது ஜோதர் ஆகிய 2 பேரை என்ஐஏ கைது செய்துள்ளது.

இவர்கள் 2 பேரும் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு உணவு, தங்கும் இடம் மற்றும் இதர உதவிகளை செய்து கொடுத்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த 3 தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்கள் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று என்ஐஏ நேற்று தெரிவித்தது.

The post பஹல்காம் தாக்குதல் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 2 பேர் கைது: என்ஐஏ அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article