பஹல்காம் தாக்குதலுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் கண்டனம்

4 hours ago 2

கோவை: “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல” என்று ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகள், அவர்களின் கடமைகளைச் செய்ய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். பயங்கரவாதத்தின் நோக்கம் போர் அல்ல. ஆனால், ஒரு சமூகத்தை அச்சத்தால் முடக்குவது. பீதியைப் பரப்புவதும், சமூகத்தைப் பிளவுபடுத்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடம் புரளச் செய்வதும், ஒவ்வொரு மட்டத்திலும் சட்டமின்மையை உருவாக்குவதும் தான் அதன் நோக்கமாகும்.

Read Entire Article