பஸ் மோதி வாலிபர் பலி

3 weeks ago 4

 

பட்டிவீரன்பட்டி, மே 7: பட்டிவீரன்பட்டி அருகே உள்ள செங்கட்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கமல் (27). இவர் நேற்று, சாலைப்புதூர் என்ற இடத்தில் டூவீலரில் வந்துகொண்டிருந்தபோது, வத்தலகுண்டுவில் இருந்து சின்னாளபட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியதில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post பஸ் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Read Entire Article