சென்னை: பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மார்ச் 13,14,15,16 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கபடும். மார்ச் 13ல் பவுர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 350 சிறப்பு பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மார்ச் 14-ல் 270 பேருந்துகளும், 15ம் தேதி 275 பேருந்துகளும் இயக்க திட்டமிட்டுள்ளது
The post பவுர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.