பவானிசாகர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து

5 months ago 21

 

சத்தியமங்கலம், டிச.13: பவானிசாகர் அருகே அரசு டவுன் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் பஸ் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். புஞ்சைப் புளியம்பட்டியில் இருந்து அரசு டவுன் பஸ் பண்ணாரி செல்வதற்காக பவானிசாகர் மற்றும் கொத்தமங்கலம் வழியாக நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகள் என பஸ்சில் 40க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.

பழைய கொத்தமங்கலம் பஸ் ஸ்டாப் அருகே பஸ் ஓட்டுநர் பள்ளி மாணவர்களை இறக்கி விடுவதற்காக நிறுத்திய போது பின்னால் வந்து கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் பின்பகுதி கண்ணாடி முழுவதும் உடைந்து விழுந்ததோடு லாரியின் முன்பக்கமும் சேதம் அடைந்தது. விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post பவானிசாகர் அருகே அரசு பஸ் மீது லாரி மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article