
தமிழ்நாடு அரசு செயலாளர் (நீர்வளத்துறை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து, அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு, 2025-2026-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, 26.05.2025 முதல் 22.09.2025 வரை 120 நாட்களுக்கு 8812.80 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டத்திலுள்ள 24504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.