சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான பழங்கால செப்பேடுகள் உள்ளிட்டவற்றை, பழைய பொருட்களை வாங்கும் கடையில் விற்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மதீனா துணை போனதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தம்பிரான் தோழர் என போற்றப்படுபவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சமய குரவர்கள் நால்வரில் ஒருவர் அவர். அவர் பிறந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் தலமாகும். அந்த ஊரில் உள்ள அருள்மிகு பக்த ஜனேஸ்வரர் திருக்கோயிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு சுந்தரர் காலத்து பொருட்கள், செப்பேடுகள் மற்றும் கும்பாபிஷேகத்தில் உபயோகப்படுத்திய பொருட்கள், திருத்தேர் பாகங்கள் எல்லாவற்றையும் ஓர் அறையில் வைத்து உள்ளனர்.