பழநி, ஜன. 24: பழநி நகரில் ரயில்வே பீடர் சாலை மற்றும் ரெட் கிராஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகளவு இருந்தன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் உண்டாகி வாகனஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது.
இதையடுத்து நேற்று நகராட்சி அதிகாரிகள் ரயில்வே பீடர் சாலை மற்றும் ரெட் கிராஸ் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. பல கடைக்காரர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றி கொண்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் எச்சரித்து சென்றனர்.
The post பழநியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் appeared first on Dinakaran.