பள்ளிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

3 months ago 13

நெல்லை: பள்ளிக்குள் சென்று மாணவியை கையைப் பிடித்து இழுத்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் பழவூர், கண்ணன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் (22). தொழிலாளியான இவர் 15 வயது பள்ளி மாணவியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவியை பொது இடங்களில் சந்தித்து பழகி வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சம்மந்தப்பட்ட மாணவியைத் தேடி மைக்கேல் சென்று உள்ளார். அங்கு சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்த மாணவியை மைக்கேல் கையைப்பிடித்து இழுத்து உள்ளார்.

இதைப்பார்த்த ஆசிரியர்கள் அந்த வாலிபரை கண்டித்து அனுப்பினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கும், அதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் மைக்கேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பள்ளிக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article