பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஒரு வாரத்தில் இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை

1 day ago 5

சென்னை,

கோடை விடுமுறை முடிந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் நாளை (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்ட 2 வாரத்துக்குள் இலவச பஸ் பயண அட்டை (பஸ் பாஸ்) வழங்கப்பட்டு வருகிறது. சில நேரங்களில் காலதாமதமும் ஏற்படுகிறது.

இந்த ஆண்டு காலதாமதம் ஏதும் இன்றி சரியான நேரத்தில் மாணவ-மாணவிகளுக்கு வழங்க அரசு போக்குவரத்துக்கு கழகத்தின்கீழ் செயல்படக் கூடிய சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) முடிவு செய்துள்ளது.

அதன்படி, பள்ளி மாணவ-மாணவிகளின் விவரங்களை உள்ளடக்கிய கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) வாயிலாக விவரங்களை பதிவிறக்கம் செய்து அதன் அடிபப்டையில் பயண அட்டையை வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள இருக்கிறது.

அதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளில் யார்? யாருக்கெல்லாம் பஸ் பயண அட்டை வேண்டும் என்ற விவரத்தை தெரிவிக்கவும், அதனை அடிப்படையாக வைத்து பஸ் பயண அட்டையை வழங்க ஏதுவாகவும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. 

Read Entire Article