லாகூர்: பாகிஸ்தான் -வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையே நடந்த 2 டெஸ்ட் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதில் முதல்தானில் நடந்த 2வதுடெஸ்ட்டில் வெஸ்ட்இண்டீஸ் 120 ரன் வித்தியாசத்தில் அபார பெற்றது. 34 ஆண்டுக்கு பின் பாகிஸ்தான் மண்ணில் வெஸ்ட்இண்டீஸ் டெஸ்ட்டில் வெற்றிபெற்று அசத்தியது. இந்நிலையில் சொந்த மண்ணில் பாகிஸ்தான் தொடர் தோல்விகளால் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா கூறுகையில், “இதுதான் நமது கிரிக்கெட்டின் ஒரு ஏமாற்றம் அளிக்கும் பகுதியாக இருக்கிறது.
முன்னணி அணிகளுக்கு எதிராக நாம் நமது ஆட்டத்திறனை உயர்த்துகிறோம். ஆனால் பலவீனமான அணிகளுக்கு எதிராக நாம் நமது தரத்தை கைவிட்டு அவர்களது மட்டத்தில் விளையாடுகிறோம். பாகிஸ்தான் போன்ற ஒரு அணியிடம் இருந்து நீங்கள் எதிர்பாராத அடிப்படை தவறுகள் முழுமையாக வெளிப்பட்டுள்ளன. இதை விளக்கிக் கூறுவது கடினமான விஷயமாகும். குறிப்பாக வெஸ்ட்இண்டீசுக்கு அணிக்கு எதிராக பாரம்பரியமான சுழற் பந்துவீச்சு சூழலுக்கு எதிராக வலிமையாக இல்லை. இருந்தாலும் ஆடுகளத்தின் சூழ்நிலை, டாசை வெல்வது மிக முக்கியமானதாக மாறியது. டாசை இழந்து நீங்கள் நிலைமைகளை பயன்படுத்திக்கொள்ள தவற விட்டீர்கள் என்றால் இது போன்ற தோல்விகள் மறுக்க முடியாதது ஆகிவிடும்”, என்றார்.
The post பலவீனமான அணிகளிடம் தரத்தை இழக்கிறோம்: பாக்.மாஜி வீரர் சாடல் appeared first on Dinakaran.