
மதுரை,
மதுரை மாவட்டத்தில் உள்ள 25-க்கும் மேற்பட்ட காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் 806 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பொட்டலங்கள் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள பொத்தையடியில் இருக்கக்கூடி பயோமெட்ரிக் ஆலையில் போலீசார் தீயிட்டு அழித்தனர்.
இதனை முன்னிட்டு அந்த ஆலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.