பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

3 months ago 10

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார். அவரது வழக்கறிஞர், செந்தில் பாலாஜியிடம் பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகலை அளிக்கக் கோரி மனுதாக்கல் செய்துள்ளதாக கூறினார். அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், ஆவணங்களின் நகல் சிறப்பு நீதிமன்றத்தின் வசம்தான் உள்ளன. அங்கிருந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கூறினார். இதையே, பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இதனிடையே, ஆவணங்களின் நகல் கிடைக்கும் வரை தடயவியல் துறை கணினிப் பிரிவு உதவி இயக்குநர் மணிவண்ணனுக்கு பதிலாக அடுத்த சாட்சியிடம் விசாரணை நடத்தலாமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.அடுத்த விசாரணையின் போது தெரிவிப்பதாக அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்தார்.

The post பறிமுதல் செய்து தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட டிஜிட்டல் ஆவணங்களின் நகல் கேட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி மனு: அமலாக்கத்துறை பதில் தர முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article