‘பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராகுங்கள்’ - மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக அறிவுறுத்தல்

4 months ago 26

சென்னை: பருவமழையை எதிர்கொண்டு மக்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகளுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல் படி, அரசின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பல்வேறு ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, அரசு இயந்திரத்தை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள், ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அரசின் சார்பில் உரிய அறிவுரைகள், வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

Read Entire Article