தேவையானவை:
பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ,
துவரம்பருப்பு – அரை கப்,
மிளகாய் வற்றல்- 4,
உப்பு – தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – அரை கப்.
செய்முறை:
இதுவும் ஒருவிதமான எண்ணெய் கத்திரிக்காய்தான். துவரம்பருப்பை ஊற வைத்துதண்ணீரை வடித்துவிட்டு உப்பு, மிளகாய் வற்றல் சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். கத்திரிக்காய்ஒன்றை நான்காக வகிர்ந்து கொள்ளவும். காயை 10-15 நிமிடங்கள் அரிசி கழுவிய நீரில்ஊற விடவும். கத்திரிக்காயை வெளியே எடுத்து அரைத்த மசாலாவைக் காயினுள் திணிக்கவும்.சட்டியில் தாளித்து போட்டு மசாலா திணித்த கத்திரிக்காயைச் சேர்த்து குறைந்த தீயில் வதக்கிஇறக்கவும்.குறிப்பு: காயை ஆவியில் கொஞ்ச நேரம் வேக வைத்தும் வதக்கலாம். இவ்விதம் செய்தால் சீக்கிரம்வதங்கி விடும். எண்ணெய் குறைவாகச் செலவாகும்.
The post பருப்பு கத்திரிக்காய் appeared first on Dinakaran.