சென்னை, மே 24: சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலையத்திற்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று மற்றும் 26ம் தேதிகளில் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 3.15 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மதியம் 12.40 மணிக்கும் இயக்கப்படும் ரயில்கள், மூர்மார்க்கெட்-சூலூர்பேட்டை இடையே காலை 10.30, 12.10, 1.40 மணிக்கும் மறுமார்க்கமாக காலை 11.45, 1.15, 3.10, 9 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, 11.35 மணிக்கும் மறுமார்க்கமாக மதியம் 1 மணிக்கும், சூலூர்பேட்டை- நெல்லூர் இடையே மாலை 3.50 மணிக்கும், மறுமார்க்கமாக மாலை 6.45 மணிக்கும், மூர்மார்க்கெட்- ஆவடி இடையே இரவு 11.40 மணிக்கும், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே காலை 10.55, 2.30, 3.15 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் ரயில் சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே ரத்து செய்யப்படுகிறது. கும்மிடிப்பூண்டி- தாம்பரம் இடையே மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் 26ம் தேதி ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The post பராமரிப்பு பணிகள் காரணமாக 18 மின்சார ரயில்கள் ரத்து appeared first on Dinakaran.