பராமரிப்பு பணி: ரெயில் சேவைகளில் நாளை மாற்றம்

3 hours ago 3

சென்னை,

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரெயில்வேயின் சேலம் கோட்டத்தில் நடைபெறும் பல்வேறு பொறியியல் பணிகள் காரணமாக ஈரோடு -திருச்சி பாசஞ்சர் ரெயில் (வண்டி எண்: 56106) நாளை (வெள்ளிக்கிழமை) ஈரோடு ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு கரூரில் நிறுத்தப்படும். இந்த ரெயில் ஈரோடு- கரூர் இடையே மட்டுமே இயக்கப்படும். கரூர் -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

பாலக்காடு டவுன்:-

பாலக்காடு டவுன்- திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) நாளை (வெள்ளிக்கிழமை) பாலக்காடு டவுன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு குளித்தலை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரெயிலானது பாலக்காடு- குளித்தலை இடையே மட்டுமே இயக்கப்படும். குளித்தலை -திருச்சி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமாக மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) நாளை (வெள்ளிக்கிழமை) திருச்சி - கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயிலானது கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

காரைக்கால் டெமு ரெயில்:-

திருச்சி கோட்டத்தில் திருவாரூர்- கொரடாச்சேரி இடையே நடந்து வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூரில் நிறுத்தப்படும். இந்த ரெயிலானது திருச்சி- திருவாரூர் இடையே மட்டுமே இயக்கப்படும்.

காரைக்காலில் இருந்து வழக்கமாக பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்:16819) நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் 3,4-ந் தேதிகளில் காரைக்காலில் இருந்து திருவாரூர் வரை பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு மாலை 4.15 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article