சென்னை: பரந்தூர், ஆவடி உள்ளிட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது குறித்து, ஆசிய முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, சென்னையில் ஏற்கெனவே மெட்ரோ ரயில் 2-ம் கட்டம் திட்டத்துக்கு நிதி உதவி செய்துள்ளது.
தற்போது ஆய்வு பணிக்காக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவுடன் இணைந்து, தாம்பரம் மற்றும் கிளாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு ஒருங்கிணைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வுகளை நேற்று மேற்கொண்டனர்.