பயோனியர் குமாரசுவாமி கல்லூரி ஆண்டு விழா

5 hours ago 3

நாகர்கோவில், மார்ச் 19:நாகர்கோவில், பயோனியர் குமாரசுவாமி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா நடந்தது. விழாவில் பயோனியர் பள்ளி தாளாளர் லதா குமாரசுவாமி குத்துவிளக்கு ஏற்றினார். முனைவர் சூசன் வர்க்கீஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் ஜெயசேகரன் கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார்.கல்லூரி செயலாளர் குமாரசுவாமி தலைமையுரை ஆற்றினார். மூத்த பத்திரிகையாளர் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து, தன்னம்பிக்கையுடன் வாழ பல்வேறு வழிகளை எடுத்துரைத்தார். மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முனைவர் தேவ அன்பன் நன்றி கூறினார்.

The post பயோனியர் குமாரசுவாமி கல்லூரி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Read Entire Article