
கும்மிடிப்பூண்டி,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி-கவரப்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 21 மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. (திங்கட்கிழமை) மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்டிரலில் இருந்து நாளை காலை 5.40, 8.35, 10.15 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.45, மதியம் 12.35, 1,15 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டிரலில் இருந்து நாளை காலை 8.5, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.55, 11.25, மதியம் 12, 1 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே போல, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 மணிக்கு புறப்பட்டு சென்டிரல் வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
இதனால் 17-ந் தேதி மட்டும் சென்டிரல்-பொன்னேரி இடையே காலை 9 மணிக்கும், சென்டிரல்-மீஞ்சூர் இடையே காலை 9.30, 10.30 மணிக்கும், மீஞ்சூர்-சென்டிரல் இடையே காலை 11.56, மதியம் 1.31 மணிக்கும், பொன்னேரி-சென்டிரல் இடையே மதியம் 12.18 மணிக்கும், சென்டிரல் -எளாவூர் இடையே காலை 11.35 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

