சென்னை: நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 22.04.2025,செவ்வாய்க்கிழமை அன்று காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதல் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் பொது வெளியில், சுற்றுலாத் தலத்தில் பொது மக்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த கொடூரத் தாக்குதலை ஈடு செய்ய எந்தவித மருந்தோ, ஆறுதலோ இருக்க முடியாது.