பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு ஸ்பிரிங்லர் மூலம் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள்

2 hours ago 1

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காய்கறி பயிர்களை வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் விவசாயிகள் ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீா் பாய்ச்சி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் துவங்கி டிசம்பர் வரை கனமழை பெய்தது. தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில் பனிப்பொழிவு தாமதமாக ஜனவரியில் துவங்கியது. பகலில் வெயிலும், அதிகாலை,மாலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான உறைபனிப் பொழிவு இருந்ததால் தேயிலை மற்றும் காய்கறி பயிர்கள் கருகின.

கடந்த இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டன.இந்நிலையில் தற்போது பனிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், நீலகிாி மாவட்டத்தில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் முதல்போக காய்கறி விவசாய பணிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர்.

குறிப்பாக ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா,கப்பத்தொரை,கல்லக்கொரை ஆடா,கேத்தி பாலாடா, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தங்களின் நிலங்களை சமன்படுத்தி விதைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், விளைநிலங்களில் பயிாிட்டுள்ள காய்கறி பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு நீர்பாய்ச்சும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கிணறுகளில் உள்ள நீரை மோட்டார் பயன்படுத்தி ஸ்பிாிங்லர் மூலம் காலை மற்றும் மாலை வேளைகளில் நீர்பாய்ச்சி வருகின்றனர்.

இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் விவசாய பயிர்களுக்கு தண்ணீா் பற்றாக்குறை ஏற்படகூடிய அபாயம் உள்ளது. விவசாயிகள் கூறுகையில், பனிப்பொழிவு நிலவி வந்ததால் காய்கறி பயிர்கள் கருகின. மகசூலும் பாதித்தது.

தற்போது பனிக்குறைந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் முதல்போக விவசாய பணிகள் துவக்கப்பட்டு விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மீண்டும் பனிப்பொழிவு துவங்கியுள்ளது.இதனால் பயிா்கள் பாதிக்காத வண்ணம் ஸ்பிாிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சி வருகிறோம், என்றனா்.கோத்தகிரி: கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தொழிலுக்கு அடுத்தப்படியாக மலைக்காய்கறிகளான முட்டை கோஸ்,பீன்ஸ்,லீக்ஸ், உருளைக்கிழங்கு,பீட்ரூட்,காலிபிளவர் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூக்கல்தொரை,கேர்க்கம்பை,ஈளாடா,கோடநாடு, கீழ் கோத்தகிரி,பில்லிக்கம்பை,கட்டபெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த மாதம் முதல் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் இப்பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ள மலைக்காயாகறிகளை கடந்த மாதம் முதல் பெய்த பனிப்பொழிவு மற்றும் பகல் நேரங்களில் நிலவும் கடும் வெயிலின் காரணமாக மலைப்பயிர்கள் கருகாமல் பாதுகாக்க தற்போது விவசாயிகள் மூலம் நீர் தெளிப்பான் கருவிகள் மூலம் காலை மற்றும் மாலை ஆகிய இருவேலைகளில் நீர்பாய்ச்சப்பட்டு பாதுகாக்கப்படுவதோடு, விளைச்சலுக்கு ஏற்றவாறு நீர் தெளிக்கப்பட்டு வருகிறது.இதன் மூலம் பனிப்பொழிவில் இருந்து மலைப்பயிர்கள் பாதுகாக்கப்படுவதோடு அதிக மகசூல் தரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு ஸ்பிரிங்லர் மூலம் காய்கறி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Read Entire Article