பந்து வடிவில் கைப்பற்றப்பட்ட பொருள் நாட்டு வெடிகுண்டா? மர்மபொருள் வெடித்த இடத்தில் போலீசார் சோதனை..!

8 months ago 42
மாமல்லபுரத்தில் மர்ம பொருள் வெடித்து, பாழடைந்த காவலர் குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்த இடத்தில், வெடிபொருட்கள் ஏதும் உள்ளதா என ஜெ.சி.பி. எந்திரம் மூலம் காவல்துறையினரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். .அங்கு பந்து  வடிவிலான ஒரு பொருளை கைப்பற்றிய போலீசார், அது நாட்டு வெடிகுண்டா என்பதை அறிய தடயவியல் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். வியாழனன்று இரவு திடீரென பயங்கர சத்தத்துடன் அந்த இடத்தில் மர்மபொருள் வெடித்ததில் அருகில் உள்ள 14 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
Read Entire Article