கடலூர்: பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் . 360 செ.மீ. ஆழத்தில் 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை இரும்பு பொருட்கள், காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பின் மூலம் மருங்கூரில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிகிறது என தெரிவித்தார்.
The post பண்ருட்டி அடுத்த மருங்கூரில் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.