பல்லடம்: கள்ளுக்கு தடை விதித்தது தமிழ் இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி என பல்லடம் அருகே கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கள்ளுக்கான தடையை நீக்கக்கோரியும், கள்ளை உணவாக அறிமுகப்படுத்த வலியுறுத்தியும், பல்லடம் - கோவை சாலையில் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கள் விடுதலை மாநாடு இன்று (பிப்.24) நடந்தது.