பணியின்போது நெஞ்சுவலி: சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணிகளை காத்த பிஆர்டிசி ஓட்டுநர்!

4 months ago 18

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற பேருந்தினை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பேருந்தை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காத்தது பாராட்டு பெற்றுள்ளது. அதேபோல், ஓட்டுநரின் சிகிச்சைக்காக தனது பயணத்தை ரத்து செய்து அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்த பயணியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மாஹேவுக்கு பிஆர்டிசி பேருந்து 49 பயணிகளுடன் சென்றது. பேருந்தை ஆறுமுகம் ஓட்டிச் சென்றார். இன்று (சனிக்கிழமை) அதிகாலை மலப்புரம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக ஓட்டுநர் பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி தப்பினர். மாற்று ஓட்டுநர் குணசேகரன், நடத்துநர் ஞானவேல் ஆகியோர் மலப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர் ஆறுமுகத்தை சேர்த்தனர்.

Read Entire Article