பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: விதிமுறைகள் உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

2 months ago 17

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பதற்கான விதிமுறைகளை மாநில மகளிர் ஆணையம் உருவாக்கி, தமிழக அரசிடம் வழங்க வேண்டும். அரசு அதைப் பரிசீலித்து, உரிய மாற்றங்கள் செய்து அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் தொல்லையை தடுக்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களில், "அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த தொல்லைகளை வெளியே சொல்ல முடியாமல் பெண்கள் வேதனையில் உள்ளனர். இதனால் பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளிப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தனர்.

Read Entire Article