பட்டை நாமம் போட்டு அங்கன்வாடி ஊழியர் போராட்டம்

5 hours ago 1

விருதுநகர், மே 10: பட்டை நாமம் போட்டு பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் பழைய பஸ் நிலையம் எதிரில் சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பட்டை நாமம் போட்டு மடிப்பிச்சை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது. சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமையில் அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில பொருளாளர் மேகனவள்ளி தாயார் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வருவாய் கிராம உதவியாளருக்கு வழங்குவது போல் ரூ.6,750 மாத ஓய்வூதியமாக சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். எம்எல்ஏக்களை போல் ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கும் உயர்த்தி வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பி பிச்சை எடுக்க முயன்றனர். மேற்கு காவல்நிலைய போலீசார் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த முயன்ற 93 பெண் ஊழியர்கள் உள்பட 103 பேரை கைது செய்தனர்.

The post பட்டை நாமம் போட்டு அங்கன்வாடி ஊழியர் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article