ஆண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை..? - விருத்தாச்சலத்தில் விதி மீறிய அதிகாரிகள்!

1 month ago 8

திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டமாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டாடப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு மகளிர் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, தகுதியுள்ள இன்னும் பலருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வரும் நிதியமைச்சரும் உத்தரவாதம் அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் ஆண்கள் பெயரிலும், அரசு ஊழியர்கள் குடும்பங்களுக்கும் விதிகளுக்குப் புறம்பாக மகளிர் உரிமைத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது. மகளிர் உரிமைத் தொகை திட்​டத்​துக்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 1 கோடியே 14 லட்​சம் குடும்​பத் தலைவி​களுக்கு தற்​போது மாதம் ஆயிரம் ரூபாய் வங்​கிக் கணக்​கில் வரவுவைக்​கப்​படு​கிறது. அதேசம​யம் இதற்​காக விண்​ணப்​பித்​தவர்​களில் சுமார் 57 லட்​சம் பேரது மனுக்​கள் பல்​வேறு காரணங்​களுக்​காக நிராகரிக்​கப்​பட்​டன. நிராகரிக்​கப்​பட்​ட​வர்​கள் மேல்​முறை​யீடு செய்​ய​லாம் என அரசு அறி​வித்​தது. அப்​படி முறை​யீடு செய்​தவர்​களுக்கு இது​வரை உரிமைத் தொகை கிடைத்​த​பாடில்​லை.

Read Entire Article