பட்டியலின ஊராட்சி தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது ஏன்? - விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்

4 months ago 23

சென்னை: பட்டியலின ஊராட்சித் தலைவர்களை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சந்திக்க மறுத்தது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவதற்காக சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரை சந்திப்பதற்காக நாகை பிரதாபராமபுரம் ஊராட்சித் தலைவர் சிவராசு, கடலூர் சி.முட்லூர் ஊராட்சித் தலைவர் வேதநாயகி, திருச்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவர் ரம்யா, கோவை கெம்மரம்பாளையம் ஊராட்சித் தலைவர் செல்வி நிர்மலா ஆகியோர் வந்துள்ளனர்.

Read Entire Article