பட்டாசுகள் வெடித்து ஒருவர் கருகி பலி

3 months ago 9

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வேலாயுதரஸ்தா சாலையில் மண்குண்டான்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் உள்ளது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கும், கேரளாவிற்கும் பட்டாசுகள் அனுப்பப்பட்டு வருகின்றன. நேற்று மாலை டிரான்ஸ்போர்ட்டில் லோடுமேன்கள் பட்டாசு பண்டல்களை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது பண்டல்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்து சிதறின. இதில் சிவகாசி நேரு காலனியை சேர்ந்த லோடுமேன் பால்சாமி(55) சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.

The post பட்டாசுகள் வெடித்து ஒருவர் கருகி பலி appeared first on Dinakaran.

Read Entire Article