பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது

2 months ago 6

 

விருதுநகர், பிப்.24: விருதுநகர் அருகே பட்டாசு திரிகளை வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் அருகே ஆமத்தூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஜி.என்.பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மூடையுடன் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், செங்குன்றாபுரத்தை சேர்ந்த பிரேம்குமார்(30) என்பதும், உரிமம் இன்றி 5 கட்டு பட்டாசு திரியை அவர் வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர்.

 

The post பட்டாசு திரி வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article