செங்கல்பட்டு: சிங்கபெருமாள்கோவில் அடுத்த பெரிய விஞ்சியம்பாக்கம் ஈஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிப்ரியா (24). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர். நேற்று முன்தினம் இவரது பெற்றோர் திருச்சிக்கு சென்றிருந்தனர். ஹரிப்ரியாவின் பெற்றோர் வீட்டில் இல்லாததால் நேற்று காலை ஹரிப்ரியா வீட்டை பூட்டி விட்டு பள்ளிக்கு சென்றுவிட்டார். பள்ளி முடிந்து மீண்டும் மாலை வீட்டிற்கு வந்து வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து மறைமலைநகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சென்ற மறைமலைநகர் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கதவின் பூட்டை கள்ளச்சாவி வாயிலாக திறந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி விட்டு மீண்டும் வீட்டை பூட்டி வீட்டு சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
The post பட்டப்பகலில் வீடு புகுந்து 5 சவரன் திருட்டு appeared first on Dinakaran.