மதுரை: திண்டுக்கல் பச்சைமலையான்கோட்டை கிராமத்தின் நீரோடையை அதன் பழைய நிலைக்குக் கொண்டு வர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், நிலக்கோட்டை வட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க ஆணையிடப்பட்டுள்ளது. பச்சைமலையான்கோட்டை கிராமத்தின் நீரோடையை பராமரிக்கக் கோரி அழகர்சாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நீரோடையை அதன் பழைய நிலைக்கு கொண்டு வர ஆகும் செலவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும். அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி நீரோடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
The post பச்சைமலையான்கோட்டை கிராமத்தின் நீரோடையை பழைய நிலைக்கு கொண்டு வர ஐகோர்ட் கிளை உத்தரவு..!! appeared first on Dinakaran.