டெல்லி: 3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது குறித்து நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. மசோதாக்களை நிறுத்தி வைத்ததாகக் கூறும் ஆளுநர், அதனை மீண்டும் பரிசீலிக்கும்படி கேட்க மாட்டேன் என்று கூறுவது எப்படி?.ஆளுநரின் செயல்பாடு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 200ஐ செல்லாமல் ஆக்கிவிடுவது போல் உள்ளது. அரசியலமைப்புச் சட்ட விதிகளை தாண்டி ஆளுநர் தனக்கென தனி விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுவதாகவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
The post 3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது குறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு..!! appeared first on Dinakaran.