சென்னை: நொளம்பூர் ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் சேவை மையத்தை பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி திறந்து வைத்தார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, பதிவுத் துறை, பொது மக்களுக்கு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அனைத்து பதிவு சேவைகளையும் எளிதாக வழங்கி, அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் முக்கிய துறையாக தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. கடந்த 2024 - 2025-ஆம் நிதியாண்டில் தமிழகம் முழுவதும் 33,60,382 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் சென்னை மண்டலத்தில் மட்டும் 3,30,565 பதிவு செய்யப்பட்டுள்ளன.