காத்மண்டு: நேபாளத்தில் அடுத்த 2025ம் ஆண்டில் 20 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக சுற்றுலா கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த சுற்றுலா கண்காட்சியை நேபாள துணை பிரதமர் பிஷ்ணு பிரசாத் பவுடல் தொடங்கி வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட பலூன்கள் தீப்பிடித்து எரிந்தது. இதில் நேபாள துணை பிரதமரும், நிதி அமைச்சருமான பிஷ்ணு பிரசாத் பவுடல் மற்றும் போக்ரோ நகர மேயர் தன்ராஜ் ஆச்சார்யா ஆகியோர் தீக்காயம் அடைந்தனர்.
The post நேபாள சுற்றுலா கண்காட்சியில் ஹைட்ரஜன் பலூன் எரிந்து துணை பிரதமர் காயம் appeared first on Dinakaran.