
திருச்சி,
திருச்சியில் இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் பொன் விழா மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின்,
சிறுபான்மையினருக்கு உரிமைகள் தருவதில் திமுக முதலிடம். நானும், திமுகவும் சிறுபான்மை மக்களின் நலன் மீது அக்கறையோடு செயல்படுகிறோம்.என தெரிவித்தார்.
பின்னர், நிகழ்ச்சியில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்,
நெல்லை நூலகத்திற்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும். சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்விருக்கை அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.