நெல்லை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம்

3 hours ago 3

நெல்லை, அக்.10: நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 24 பேர் கலந்து கொண்டு புகார் மனுக்களை அளித்தனர். நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீரப்பு முகாம் நடந்து வருகிறது. அதன்படி நேற்று நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் நெல்லை மாவட்ட எஸ்பி சிலம்பரசன் புகார் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டது. புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட எஸ்பி சிலம்பரசன் மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post நெல்லை எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article