நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை என டீன் மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று 1000க்கும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்ததால் மாத்திரை வழங்க கால தாமதம் ஏற்பட்டது. பணியாளர்கள் பற்றாக்குறையே நோயாளிகள் காத்திருப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. நான் நேரில் சென்று நிலைமையை உணர்ந்து நோயாளிகளுக்கு உடனடியாக மாத்திரை வழங்க ஏற்பாடு செய்தேன் என மருத்துவமனையின் டீன் தெரிவித்துள்ளார்.
The post நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லை என டீன் மறுப்பு தெரிவித்துள்ளார் appeared first on Dinakaran.