நெல்லிக்குப்பம் அருகே நரிமேடு ஊராட்சி அலுவலகத்தில் செயலர் தூக்குபோட்டு தற்கொலை

2 months ago 9

 

நெல்லிக்குப்பம், பிப். 25: நரிமேடு ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி செயலர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார்(55), ஊராட்சி செயலர். இவர் கடந்த 8 வருடங்களாக நரிமேடு ஊராட்சியில் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். வழக்கம்போல நேற்று காலை அய்யனார் வேலைக்கு சென்றார். அலுவலகத்தில் அய்யனார் மற்றும் அவருடன் பணிபுரியும் கணினி உதவியாளர் ராஜா ஆகிய இருவரும் தங்களது பணிகளை கவனித்தனர். பின்னர் மதியம் உணவு வாங்க ராஜா அலுவலகத்தில் இருந்து சென்றுவிட்டார். பின்னர் ராஜா மீண்டும் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகத்தின் கதவு உள் தாழிட்டபடி மூடி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த ராஜா ஜன்னல் வழியாக பார்த்தபோது ஊராட்சி செயலர் அய்யனார் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உடலை மீட்டனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லிக்குப்பம் அருகே நரிமேடு ஊராட்சி அலுவலகத்தில் செயலர் தூக்குபோட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article