நெல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு

3 hours ago 2

 

சிங்கம்புணரி,பிப்.7: சிங்கம்புணரி-திருப்பத்தூர் சாலையில் உள்ள கூட்டுறவு சொசைட்டி வளாகத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான ரைஸ் மில் இயங்கி வருகிறது. இந்த ரைஸ் மில்லில் எஸ்.புதூர் ஒன்றியம் மேலவண்ணாருப்பு பகுதியைச் சேர்ந்த முத்துமலையாண்டி மனைவி மல்லிகா(50) வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மூன்று பெண், இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர், நேற்று முன்தினம் நெல் அரவை மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தபோது சேலை இயந்திரத்தின் பெல்ட்டில் சிக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவரது கால்கள் இரண்டும் பலத்த சேதம் அடைந்தது. அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மல்லிகா இறந்தார். இதுகுறித்து சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல் அரைக்கும் இயந்திரத்தில் சிக்கிய பெண் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article