நெருங்கும் பக்ரீத் பண்டிகை... களைகட்டிய ஆடுகள் விற்பனை

1 day ago 6

திண்டுக்கல்,

இஸ்லாமிய மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ம் நாளில் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 7-ந் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெற்ற ஆட்டு சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக குவிந்தன. இதில் எடைகளுக்கு ஏற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. அதிலும் பக்ரீத் பண்டிகை என்பதால் வழக்கத்தை விட ஆயிரம் ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை அதிக விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Read Entire Article