
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனந்தநாடார் குடியிருப்பு மெயின் ரோட்டை சேர்ந்த இளைஞர் ஆனந்த் (வயது 28). இவர் சென்னையில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த ஆனந்த் கடந்த 28ம் தேதி கோட்டார் பகுதியில் உள்ள அம்மன்குளம் தெருவுக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த ஆனந்த் திடீரென நடுரோட்டில் வைத்து உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீக்குளித்த ஆனந்த அலறித்துடித்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் ஆனந்தை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சைபலனின்றி ஆனந்த் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆனந்த் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.